ஆண்மை தவறேல் – பகுதி 45 – இறுதி பகுதி
“ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத்திடுங்க..!!” ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான். இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை. கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன.